Wednesday, July 17, 2013

படித்தது..........

வைகோ கிண்டல்: பெட்ரோல் விலை ரூ35.71-ல் இருந்தபோது, பதவியேற்றவர் மன்மோகன் சிங்!

மன்மோகன் சிங் அரசின் சாதனை, நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்ததுதான்” என்று குற்றம்சாட்டியுள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மன்மோகன்சிங் 2004-ல் பதவி ஏற்றபோது, ரூபாய் 35.71 ஆக இருந்த பெட்ரோல் விலையை இப்போது, 73.60 அளவுக்கு உயர்த்தியுள்ளது அடுத்த சாதனை” என்று சாடியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுகிறார்கள். ஆனால், அண்டை நாடுகளிலும், ஆசியா, ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல் விலை இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு குறைவாகவே உள்ளது.
2010 ஜூன் முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்த பின்னர், பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்த்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இதனால், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி, விலைவாசியும் ஏறிக்கொண்டே போகிறது. மத்திய அரசு விலைவாசி ஏற்றத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், தொடர்ந்து அலட்சியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்ததுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனை ஆகும்.

நினைத்தது........
என்று தணியும் இந்த ......

No comments:

Post a Comment