Sunday, June 9, 2013

இந்தியாவை மீண்டும் தலை நிமிறச்செய்யும் செய்தியை படியுங்கள்

பாஜக தேர்தல் பிரச்சாரக்குழுத் தலைவரானார் நரேந்திர மோடி

2014 இல் நடைபெற உள்ள தேர்தலுக்கு பாஜகவின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கோவா செயற்குழு கூட்டத்தில் முறைப்படி அறிவித்தார்.

பிரச்சாரக் குழுவின் தலைவரானதை அடுத்து நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார். பிரச்சாரத்திற்கு தலைமையேற்று பாஜகவை வெற்றிப் பாதைக்கு மோடி அழைத்துச் செல்வார் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மோடிக்கு முக்கியத்துவம் கொடுப்படுவதை எதிர்க்கும் பொருட்டு அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியின் தேசிய செயற்குழுவைப் புறக்கணித்ததாக சொல்லப்பட்ட போதிலும் நரேந்திர மோடிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் பிரச்சாரக்குழு தலைவர் என்ற பொருப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment