Thursday, June 13, 2013

படித்தது

கருணாநிதிக்கு மேடையேறிப் போய் வணக்கம் வைத்த சோ!

சென்னை: சென்னையில் நேற்று நடந்த முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதியை, மேடை ஏறிப் போய் வணக்கம் வைத்தார் துக்ளக் ஆசிரியர் சோ.
திருநாவுக்கரசரின் மகன் அன்பரசன் திருமணம் நேற்று சென்னையில்நடந்தது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
துக்ளக் ஆசிரியர் சோவும் திருமணத்திற்கு வந்திருந்தார். வந்தவர் மேடைக்கு எதிர்புறம் இருக்கையில் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் திமுக தலைவர் கருணாநிதி வந்தார். அவர் மேடைக்கு வந்ததைப் பார்த்த சோ, உடனே மேடை ஏறிப் போனார். பின்னர் கருணாநிதியை கும்பிட்டு வணக்கம் என்று கூறினார்.
அதைப் பார்த்த கருணாநிதியும் பதில் வணக்கம் வைத்துப் புன்னகைத்தார். முதல்வர் ஜெயலலிதா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர் சோ என்பது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் கருணாநிதியை மேடை ஏறிச் சென்று வணக்கம் வைத்த சோவின் பண்பை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
நினைத்தது
இப்படியும் நல்ல பண்புள்ள மனிதர்கள் இருக்கிறார்கள்

No comments:

Post a Comment