Friday, June 21, 2013

படித்தது......

ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ராமதாஸ் அறிவிப்பு-திகிலில் திமுக!

           ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று பா.ம.க. அறிவித்துவிட்டது. இதனால் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் வெற்றி தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முடிவெடுக்க சென்னையில் இன்று அக்கட்சியின் செயற்குழுக் கூடியது.
இந்த கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
           பாமகவிடம் ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார் ஸ்டாலின். துரைமுருகன் மூலமும் பேச்சு நடத்தப்பட்டது.
ஆனால் இனி திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டினை எடுத்துள்ள பாமக ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு தரப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் கனிமொழியின் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நினைத்தது......
அடேயப்பா என்னவெல்லாம் மாய்மாலம் செய்யவேண்டியுள்ளது அரசியலில்.....

 

No comments:

Post a Comment