Tuesday, June 25, 2013

படித்தது.......

டெல்லி மேல்–சபை தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு

     நேற்று இரவு திடீரென தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இது குறித்த தகவலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி. நிருபர்களிடம் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் நடக்க உள்ள மேல்–சபை தேர்தலில் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் கனிமொழியை காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் கனிமொழிக்கு தனது வாக்கினை அளிப்பார்கள்.
   தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதால் தி.மு.க.வுக்கு 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்க உள்ளது. அதே நேரத்தில் தே.மு.தி.க.வுக்கு 22 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளே கிடைக்கும் நிலை உள்ளது. எனவே டெல்லி மேல்–சபை தேர்தலில் 6–வது எம்.பி.யாக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
    இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய கடித்தத்தில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். காரணம் மேல்-சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அறிவித்ததற்காக நன்றி கூறி கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நினைத்தது........
 
  அப்போ இலங்கை தமிழர்கள் காரணம் கூறி இவர்கள் ஆடியது பித்தலாட்டம்.......
 இப்போதாவது தி.மு.க மற்றும் காங்கிரசின் வேஷம் கலைந்ததே....கடவுளே இவர்களிருந்து நாட்டை காப்பாற்றுவாயா??????

No comments:

Post a Comment